Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜனவரி 19 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியன் மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்காக 51 மில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவசரகால நிவாரண பிரதி இணைப்பாளர் கதரின் பிராக், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
வெள்ளத்தினால் 43 பொதுமக்கள் பலியாகியுள்ளதுடன், 4 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளநீர் வற்றிச் செல்கின்ற நிலையில் அரசாங்கத்தின் நலன்புரி நிலையங்களில்; 10,000க்கும் குறைவான பொதுமக்கள்; தங்கியுள்ளனர்.
அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்த பின்னர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கதரின் பிராக் திரும்பிச்செல்லவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025