Suganthini Ratnam / 2011 ஜனவரி 19 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியன் மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்காக 51 மில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவசரகால நிவாரண பிரதி இணைப்பாளர் கதரின் பிராக், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
வெள்ளத்தினால் 43 பொதுமக்கள் பலியாகியுள்ளதுடன், 4 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளநீர் வற்றிச் செல்கின்ற நிலையில் அரசாங்கத்தின் நலன்புரி நிலையங்களில்; 10,000க்கும் குறைவான பொதுமக்கள்; தங்கியுள்ளனர்.
அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்த பின்னர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கதரின் பிராக் திரும்பிச்செல்லவுள்ளார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago