ஆர்.மகேஸ்வரி / 2018 மார்ச் 07 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் தற்போதைய நிலைத் தொடர்பில் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்களான மஹேல, சங்கக்கார மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோர் தமது கருத்துக்களை டுவிட்டர் வலைத்தளம் மூலம் பதிவிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வெறுப்படைவதாக சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதனை தான் வன்மையாக கண்டிப்பதாகவும், இதுதொடர்பில் தேவையான சட்டநடவடிக்கையை எடுக்குமாறும் ,இலங்கை மக்கள் இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்புடனும், புத்திசாதூரியத்துடனும் செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, மதம், இனம் என்ற காரணத்தால், பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும், நாம் ஒரே நாடு, ஒரே இனம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், தற்போதைய அசாதாரண சூழ்நிலையை வன்மையாக கண்டிப்பதாகவும், தான் 25 வருடமாக யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பிறந்து வளர்ந்துள்ள போதிலும், புதிய சந்ததியினர் அவ்வாறான நிலையின் கீழ் வாழவேண்டிய அவசியமில்லை என்றும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன பதிவிட்டுள்ளார்.
36 minute ago
43 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
43 minute ago
1 hours ago
3 hours ago