2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

‘சஜித்தின் வெற்றி உறுதியாகிவிட்டது’

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் சஜித்தின் வெற்றி உறுதியாகிவிட்டது என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

இன்று காலி முகத்திடலில் நடைபெற்ற, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'கோட்டா ஜனாதிபதியானால் பிரதமராக மஹிந்தவும் அமைச்ரவையில் பசில், நாமல் என குடும்ப ஆட்சி மீண்டும் வந்து விடும்.

எ​னவே வறிய மக்களின் வேதனைகளின் புரிந்துகொண்டு அவர்களின் வேதனைகளை போக்கக் கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாஸவே என்றார்.

அத்துடன் நுவரெலியாவில்  அமைச்சர் திகாம்பரத்தின் ஆதரவுடன் நாம் வெற்றிபெறுவோம் என்றும் துன்பபடும் மக்களின் வாக்கு பலத்துடன் சஜித்தை நாட்டின் தலைவராக்குவோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X