Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2020 ஒக்டோபர் 20 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்காக அவர் நீர்கொழும்பு பள்ளன்சேன சிறைச்சாலைக்கு நேற்று (19) இரவு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைக்கு வரும் கைதிகள் 14 நாள்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்க வேண்டும்.
கொழும்பு சிறைச்சாலைகளில் உள்ள சிறைக்கைதிகள் 14 நாள்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பள்ளன்சேன சிறைச்சாலைக்கே அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
அதற்கமைவாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைளுக்காக அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
12 minute ago
22 minute ago
29 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
29 minute ago
34 minute ago