Editorial / 2017 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதற்காக, பிரத்தானியா தன்னுடை பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
அத்துடன், கடந்த வருடம் பிரித்தானியா மற்றும் இலங்கை ஆயுத படைகளுக்கிடையிலான தொடர்புகள் புதுப்பிக்கப்பட்டமையையும் பிரித்தானியா வரவேற்றுள்ளது.
“பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதற்காக, ஆயுதப் படைகளை பாராட்டுகின்றேன். மேலும், காணிகள் விடுவிக்கப்படின் இரண்டு சமுதாயத்தினருக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை உருவாக்கும்” என, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌறிஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, வட அயர்லாந்து தொடர்பில் ஐக்கிய
இராச்சியத்தின் சொந்த அனுபவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், மோதலின் பின்னரான நல்லிணக்கத்தின் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டார்.
தேசிய நலன் மற்றும் இராணுவத்துக்கான நலன் ஆகியவற்றில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவை நவீன இராணுவத்துக்கு அவசியமானது எனக் குறிப்பிட்ட அவர், உண்மையறிதல் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடு நல்லிணக்கத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும் எனவும் இது தேச நலனுக்கு உகந்தது எனவும் கூறினார்.
2016 ஜனவரி தொடக்கம், ஐக்கிய இராச்சியமும் இலங்கையும் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தியுள்ளன. இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் இதற்கு வழிவகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
3 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago