Editorial / 2020 ஜனவரி 06 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் உள்ளிட்ட மூவர் பிணையில் விடுக்கவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடந்த 31ஆம் திகதி காலை சரணடைந்ததை அடுத்து, ரூமி மொஹமட் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அத்துடன், கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று (06) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
வெள்ளை வேன் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்புடன் தொடர்புடைய விசாரணைகளுக்கு அமைய, அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்திருந்தார்.
முன்னதாக, அவருக்கு பிணை வழங்குவதற்காக காரணங்களை முன்வைக்க அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கை மனுவை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன கடந்த 02 ஆம் திகதி நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.
39 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
3 hours ago