2024 மே 02, வியாழக்கிழமை

வெறுமையாகியுள்ள தியத்தலாவை தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ், தியத்தலாவை இராணுவ முகாமில் அமைக்கபட்டிருந்த தனிமைப்படுத்தல் முகாமானது, இன்று வெறுமையாகியுள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மத்திய நிலையத்தில் தங்கியிருந்த அனைவரும் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளதுடன், இறுதியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருந்த 33 பேரும் இன்று அவரவர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையத்தில் மொத்தமாக 479 பேர் இதுவரை தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

முதன்முதலாக சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட 33 இலங்கை மாணவர்களே இங்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .