Princiya Dixci / 2016 ஜூலை 18 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி முதிரை மரக்குற்றிகளை சிறிய ரக பட்டா லொறியொன்றில் ஏற்றிச்சென்றவரை, இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் எச்.ஜி.தம்மிக்க, நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) உத்தரவிட்டார்.
வான்எலப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், கந்தளாயில் இருந்து வான்எலப் பகுதிக்கு அனுமதிப்பத்திரமின்றி 05 முதிரை மரக்குற்றிகளை சிறிய ரக பட்டா லொறியொன்றில் கொண்டு சென்ற போதே போக்குவரத்து பொலிஸார் வான்எலப் பாலத்துக்கருகில் வைத்து சனிக்கிழமை (16) மாலை கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபரை, கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று (17) ஆஜர்படுத்திய போதே விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபர் பயன்படுத்திய வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
16 minute ago
25 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
37 minute ago