Suganthini Ratnam / 2015 நவம்பர் 19 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் 94ஆம் கட்டை வென்ராசன்புரப் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு லொறியும் வானும் மோதி விபத்துக்குள்ளானதில், வானில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடும் மழை பெய்துகொண்டிருந்த வேளையில் இரண்டு வாகனங்களும் சற்று வேகமாக பயணித்தபோது, இந்த விபத்து சம்பவித்துள்ளது.
ஜானக்க சம்பத் (வயது 32), துசாரகேதர (வயது27) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025