Editorial / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப். முபாரக்
திருகோணமலை, சேருநுவர பகுதியில் புத்தர் சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் மூன்று பேர், நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர் என சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் போது, அம்மூவரும் மதுபோதையில் இருந்தனர் எனத் தெரிவித்த பொலிஸார், அவர்கள், சேருநுவர- தெஹிவத்த, வேவெல கெதர, மெத நுவர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்ட அனைவரும், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், மூவரையும் மூதூர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
12 minute ago
25 Mar 2026
25 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 Mar 2026
25 Mar 2026