A.P.Mathan / 2010 ஜூலை 08 , மு.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்முறை உலக கால்பந்தாட்டப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஜேர்மன் அணி அரையிறுதிப் போட்டியோடு வெளியேறியுள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியினை எதிர்த்து ஜேர்மன் அணி விளையாடியது. .jpg)
அரையிறுதிப் போட்டி என்பதால் இரு அணி வீரர்களும் சவாலாகவே விளையாடினார்கள். 51 வீதமான நேரம் தமது கட்டுப்பாட்டில் பந்தினை வைத்திருந்தார்கள் ஸ்பெயின் வீரர்கள். 49 வீதமான நேரத்தினையே ஜேர்மன் அணியினரால் பகிர்ந்துகொள்ள முடிந்தது. தோல்வியினால் துவண்டுபோயுள்ள ஜேர்மன் வீரர்களுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறியுள்ளார்கள். வரலாற்றில் முதல்தடவையாக உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருக்கும் ஸ்பெயின் வீரர்களுக்கு உலகளாவிய ரீதியில் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணமுள்ளன.25 minute ago
44 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
44 minute ago
58 minute ago