Super User / 2011 ஒக்டோபர் 20 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இங்கிலாந்து அணியுடனான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. முதல் 3 போட்டிகளிலும் வென்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இத்தொடரின் வெற்றியையும் தனதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மொஹாலியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற 3 ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 298 ஓட்டங்களைக் குவித்தது. ஜொனதன் ட்ரோட் ஆட்டமிழக்காமல் 98 ஓட்டங்களையும் சமிட் பட்டேல் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. கடைசி ஓவரில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரின் முதல்இருபந்துகளிலும் தலா 4 ஓட்டங்களை அடித்தார் அணித்தலைவர் எம்.எஸ்.டோனி.
இந்திய அணியின் சார்பில் அஜின்கியா ரெஹானே 91 ஓட்டங்களையும் கௌதம் காம்பீர் 51 ஓட்டங்களையும் பெற்றனர். டோனி ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களைப் பெற்றார். இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரெஹானே தெரிவானார்.
14 minute ago
28 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
28 minute ago
43 minute ago