2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’இராணுவ தளபதி நியமனத்தில் வெளிநாடுகள் தலையிட முடியாது’

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவ தளபதி நியமனமானது இலங்கையின் உள்விவகாரம் என்று தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, இதில் வெளிநாடுகள் தலையிடவோ அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என, அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி நியமனமானது, ஜனாதிபதியின் சுயாதீனமான தீர்மானம் என்றும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது, 

அரச சேவையின் நியமனங்கள் மற்றும் அரச சேவை செயற்பாடுகள் தொடர்பில் வெளிநாடுகள் தலையிடுவது சிறப்பான ஒன்று அல்லவென்றும் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .