Shanmugan Murugavel / 2020 நவம்பர் 19 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரின் இறுதிப் போட்டிகள் தொடருக்கு பெல்ஜியம், இத்தாலி ஆகியன தகுதி பெற்றுள்ளன.
பெல்ஜியத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற பெல்ஜியம், டென்மார்க் அணிகளுக்கிடையிலான குழு பி போட்டியொன்றில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்ற பெல்ஜியம், தமது குழுவில் முதலிடம் பெற்றதைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிகள் தொடருக்குத் தகுதிபெற்றுள்ளது.
பெல்ஜியம் சார்பாக, றொமெலு லுக்காக்கு இரண்டு கோல்களையும், யூரி டெலிமான்ஸ், கெவின் டி ப்ரூனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். டென்மார்க் சார்பாக, ஜொனாஸ் ஒல்டர் வின்ட் ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொஸ்னியா மற்றும் ஹெர்ஸெகோவினாவில் நடைபெற்ற அவ்வணிக்கும் இத்தாலிக்குமிடையிலான குழு ஏ போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று குறித்த குழுவில் முதலிடம் பெற்ற இத்தாலியும் இறுதிப் போட்டிகள் தொடருக்குத் தகுதிபெற்றுள்ளது.
இத்தாலி சார்பாக, அன்ட்ரயா பெலோட்டி, டொமெனிக்கோ பெரார்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, போலந்தில் நடைபெற்ற அவ்வணிக்கும் நெதர்லாந்துக்குமிடையிலான இன்னொரு குழு ஏ போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வென்றது. நெதர்லாந்து சார்பாக, மெம்பிஸ் டிபே, ஜோர்ஜினோ விஜ்னால்டும் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். போலந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை கமில் ஜொஸ்வியாக் பெற்றிருந்தார்.
31 minute ago
36 minute ago
40 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago
40 minute ago
48 minute ago