2025 ஜூலை 05, சனிக்கிழமை

பிரதமர் கரடியனாறுக்கு விஜயம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 17 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ.ஜயசேகர)

பிரதமர் டீ.எம் ஜயரத்ன சற்று நேரத்துக்கு முன் மட்டக்களப்பு கரடியனாறு பகுதிதுக்கு விஜயம் செய்தார். இன்று முற்பகல் கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் குறித்து ஆராய்வதற்காகவே பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் சம்பவம் தொடர்பான முழுமையான அறிகையொன்றினை தனக்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு அறிவுறுத்தியதாக பிரதமர் ஜயரத்ன தெரிவித்தார்.

அத்துடன், சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கான உடனடி சிகிச்சைகளை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சுக்கு அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார்.  

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிலையில் பதில் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு தற்காலிகமாக, பிரதமர் டீ.எம்.ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .