Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்ட முறைசாரா கல்வித்துறை சார்ந்தோரினால் உருவாக்கப்பட்ட ஆளுமைகளின் வெளிப்பாடான பொருட்களைக் கொண்ட கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு கல்லடி புனித திரேசா வித்தியாலய மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.டி.வீரவர்த்தன கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல் கல்வி அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். பெருமளவான மாணவர்களும் கண்காட்சியை பார்வையிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .