Suganthini Ratnam / 2011 நவம்பர் 18 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் நேற்று வியாழக்கிழமை கொள்கலன் பயிர்ச்செய்கையினூடாக நகர்ப்புற வீட்டுத் தோட்டம் என்னும் திட்டத்தின் கீழ் வயல் விழா அறுவடை வைபவம் நடைபெற்றது.
காத்தான்குடி விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள ஹுஸைனிய்யா நகரில் நடைபெற்ற இந்த அறுவடை வைபவத்தில் விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் இரா.ஹரிகரன், மட்டக்களப்பு மத்தி உதவி விவசாய பணிப்பாளர் ஆ.சிவஞானம், காத்தான்குடி விவசாய போதனாசிரியர் முபீதா றமீஸ் உட்பட விவசாய உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது இங்கு பயிரிடப்பட்ட கொச்சிக்காய்கள் பாவற்காய்கள் உள்ளிட்ட பயிர்கள் அறுவடை செய்யப்பட்டன.
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .