Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரியுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, செல்வாநகர் கிழக்கு பிரதேசத்திலுள்ள பத்திரகாளி அம்பாள் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (10) காலை முறைப்பாடு செய்துள்ளதாக மேற்படி கோவில் பரிபாலனசபையின் செயலாளர் அ.ஹரிகரன் தெரிவித்தார்.
திங்கட்கிழமை (9) இரவு இடம்பெற்ற இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் மேற்படி கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை (10) காலை பொலிஸார் சென்ற விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .