Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம அலுவலர்களின் மாவட்ட ரீதியான இடமாற்றம் தொடர்பில் தேர்தலுக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உறுதியளித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர் சங்க உறுப்பினர்களுக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையிலான சந்திப்பு மாவட்ட செயலகத்தில்; நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இதன்போதே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்ட உறுதிமொழியை வழங்கியதாக மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர் சங்கத்தின்; செயலாளர் த.சிறிநாதன் தெரிவித்தார்.
கிராம அலுவலர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையப்படப்பட்டன. குறிப்பாக, கடந்த ஐந்து வருடங்களாக பிரதேச செயலக ரீதியாக மாத்திரமே கிராம அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வந்தனர். ஆனால், மாவட்ட ரீதியாக எந்தவித இடமாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், இதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் தாம் வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் கூறினார்.
இதற்குப் பதிலளித்த மாவட்ட அரசாங்க அதிபர், தேர்தல் முடிந்தவுடன் இதற்கான நடவடிக்கையை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராம அலுவலர்களை உள்ளீர்த்த வகையில் செயற்படும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர் சங்கத்துக்கான நிரந்தர அலுவலகத்தை அமைப்பதற்குரிய காணியை பெற்றுத் தருமாறும் தாம் வேண்டுகோள் விடுத்த நிலையில், காணியை பெற்றுத் தருவதாக அரசாங்க அதிபர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது, கிராம அலுவலர்கள் மனச்சாட்சியுடன் சிறந்த சேவையை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
31 minute ago
1 hours ago
2 hours ago