Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 ஜனவரி 27 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 10ஆம் ஆண்டு மாணவன் ஒருவருக்கு, இன்று (27) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதர் எஜ்.ராஜ்குமார தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரில் பாடசாலை மாணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
இதனையடுத்து, மேற்படி மாணவன் கல்வி பயின்ற வகுப்பில் அனைத்து மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாணவனுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்த மேலும் 08 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 573ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 160 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Feb 2021
26 Feb 2021
26 Feb 2021