Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு, படுவான்கரை பிரதேசத்துக்குட்பட்ட போரதீவு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தீ மிதிப்பு உற்சவம் இன்று இடம்பெற்றது. கடந்த பத்து தினங்களாக இடம்பெற்ற ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட யாக பூசை இடம்பெற்றதுடன் நோற்புக்கட்டுதல் மற்றும் வாவி நீராடல் என்பனவும் இடம்பெற்றது.
ஆலயத்தின் பிரதம குருவும் உலக பிரசித்தி பெற்ற ஆன்மீக உரையாளருமான விஸ்வப்பிரம்ம ஸ்ரீ எஸ்.காந்தன் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. இன்று புதன்கிழமை காலை ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்று தெய்வ பரிபாலங்கள் சூழ இந்த தீமிப்பு உற்சவம் இடம்பெற்றது.
இந்த தீமிப்பு உற்சவத்தில் நேர்த்திக் கடன்களை கொண்ட பக்தர்கள் தீயில் இறங்கி தமது நேர்த்திகளை நிறைவுசெய்தனர். இந்த நிகழ்வில் குழந்தைகள் பெரியவர்கள் என ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் இடம்பெற்ற தெய்வங்கள் ஆடி வாக்கும் சொல்லும் நிகழ்வுகள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தன. இறுதியாக இடம்பெற்ற ஆயுத பூசையுடன் வருடாந்த உற்சவம் நிறைவுற்றது.
37 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
2 hours ago