2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

காட்டுக்கு தீ வைத்தவர் விளக்கமறியலில்

Niroshini   / 2016 ஜூலை 13 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறை- கனவரெல்ல பகுதியில் தோட்டத்திலுள்ள காடொன்றுக்கு தீவைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட தோட்ட தொழிலாளர் ஒருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பதுளை நீதவான் நீதிமன்ற நீதவான்  ராத் ரவுன்னிகா மாரசிங்ஹ நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பசறை - கனவரெல்ல பகுதியைச்சேர்ந்த ஹமோல் வீரகண்ணன் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது தோட்டத்துக்கு அருகிலுள்ள காடொன்றுக்கு தீவைத்த குற்றச்சாட்டின் பேரில் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X