2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தலதா மாளிகையில் விசேட சுகாதார பாதுகாப்பு

மொஹொமட் ஆஸிக்   / 2020 மார்ச் 15 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வரும் சுற்றலா பயணிகளை, கொரோனா தொற்றிலிருந்துப் பாதுகாக்கும் நோக்கில், தலதாமாளிகையில் விசேட சுகாதார பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, ஸ்ரீ தலதா மாளிகையில் தியடவனே நிலமே பிரதீப் நிலங்க தேரர் தெரிவித்தார்.

கண்டியில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மூன்று கட்டங்களாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முதற்கட்டமாக, ஸ்ரீ தலதா மாளிகைக்கு உட்பிரவேசிக்கும் அனைவரும் தமது கைகள், கால்கள், முகத்தையும் கழுவுவதற்குத் தேவையான நீர், கிருமிநீக்கி போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இரண்டாவது கட்டமாக, தேசிய மூளிகைகளால் தயாரிக்கப்பட்ட கிருமிநீக்கித் திரவமொன்று சுற்றுலா பயணிகளுக்கு அருந்துவதற்காக வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மூன்றாவது கட்டமாக, உள்நாட்டு மூளிகைகள் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தி, புகைப் பிடிப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .