2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மரம் முறிந்து விழுந்ததில் வீடுகள் சேதம்

Janu   / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் நிலவி வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, திங்கட்கிழமை (20) பிற்பகல் மஸ்கெலியா, புளியாவத்தை - ஹென்சி தோட்டத்தின் மேல்பகுதியில் இருந்த பாரிய மரம் ஒன்று குடியிருப்புக்கள் மீது முறிந்து விழுந்துள்ளது.

இச்சம்பவத்தினால் வீடுகளுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், மரம் விழுந்த சந்தர்ப்பத்தில் குடியிருப்பாளர்கள் அவதானமாக செயற்பட்டதால் எவருக்கும் காயங்களோ அல்லது உயிர் ஆபத்துக்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான முதற்கட்ட உதவிகளை வழங்கத் தோட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

செ.தி. பெருமாள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .