2025 ஒக்டோபர் 18, சனிக்கிழமை

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எழுவர் கைது

Suganthini Ratnam   / 2016 மார்ச் 25 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்,  ரஞ்சித்ராஜபக்ஷ

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெசல்கமுவ ஓயா ஆற்றுப்பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஏழு பேரை ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும்  உபகரணங்கள் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர்கள் பலாங்கொடைப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .