2025 ஜூலை 05, சனிக்கிழமை

கண்டியில் வாகன விபத்து : இருவர் பலி

Super User   / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எஸ்.குவால்தீன்)

கண்டியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக கடுகண்ணாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பஹல கடுகண்ணாவ இன்று அதிகாலை 1.30 மணியளவில் இரு லொறிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டபோது அவ்விரு லொறிகளின் சாரதிகளும் பலியாகியுள்ளனர்.

இவ்விபத்தின்போது ஒரு லொறி அருகிலுள்ள கடையொன்றின் மீது மோதியதால், அக்கடையிலிருந்த 3 பேர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(படப்பிடிப்பு ஆர்.எஸ்.கீரியவத்த)
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .