Menaka Mookandi / 2011 மார்ச் 31 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
மருந்துக் வில்லையில் கறை படிந்த ஸ்டெப்ளர் பிண் ஒன்று காணப்பட்ட சம்பவம் ஒன்று கம்பளையில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
பெண்ணொருவர் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்பு வைத்தியர் வழங்கிய துண்டின் அடிப்படையில் தனியார் மருந்தகத்தில் குளிகைகளை வாங்கியுள்ளார்.
இவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று வில்லையில் அரைவாசியை குடிப்பதற்காக உடைத்தபோது அதற்குள் கறை படிந்த ஸ்டெப்ளர் பிண் ஒன்று காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக இப்பெண்ணின் கணவர் கம்பளை பொது சுகாதார அதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .