Super User / 2011 ஒக்டோபர் 05 , பி.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.பாருக் தாஜுதீன்)
பண்டாரவளை நகரசபை கட்டிடத் தொகுதியிலுள்ள கடையொன்றை வாடகைக்கு வழங்குவதற்காக மரக்கறி வியாபாரியொருவரிடமிருந்து 20 லட்சம் ரூபா லஞ்சம் கோரியதுடன் அவரிடமிருந்து 8 லட்ச ரூபாவை பெற்றுக்கொண்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள அம்மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் ஒக்டோபர் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எம்.எம்.சம்பத் பிரியங்கர எனும் இம்மாநகர சபை உறுப்பினருக்கு எதிராக பெலவல்லயைச் சேர்ந்த மரக்கறி வியாபாரியான பியசேன என்பவர் லஞ்ச ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிடம் புகார் தெரிவித்திருந்தார்.
மேற்படி மாநகரசபை உறுப்பினரை லஞ்ச ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தினர். அப்போது சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
9 hours ago
21 Mar 2026
neethan Thursday, 06 October 2011 05:23 PM
நம் நாட்டில் கடை வாடகை முதல் அரச உத்தியோகம் வரை எல்லாமே சம்தின்க் கொடுத்தால் தான் கைகூடுமோ?
Reply : 0 0
sanju Thursday, 06 October 2011 08:14 PM
இப்பதான் தெரியுது ஏன் மாநகரசபை உறுப்பினராக வர வேண்டும் என்று ஹ ஹ ஹ ,,,,,,,,,,,,,,, கடவுள் காவல் .........
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Mar 2026