Kogilavani / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சதிஸ்குமார்
இலங்கை தொழிலாளர் காங்கிரிஸின் ஆதரவாளரை, தாக்கிய குற்றச்சாட்டில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளரை பொகவந்தலாவை பொலிஸார், புதன்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.
பொகவந்தலாவை நகரத்தில் வைத்து மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்விரண்டு தொழிற்சங்களுக்கு இடையிலான வாக்குவாதமே மோதலாக மாறியதாகவும் இதன்போதே சந்தேகநபர், இ.தொ.காவின் ஆதரவாளரை தாக்கியதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்டவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதுடன் இருவருக்கும் இடையில் சமரசம் செய்துவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026