Kogilavani / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பண்டாரவளை ஞாயிறு சந்தையை நடத்துவது மறுஅறிவித்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பண்டாரவளை நகரசபை தலைவர் ஜனக்க நிஷாந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில், பண்டாரவளையிலுள்ள கிராமங்கள், தோட்டங்களுக்கு அறிவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
வெல்லவாய, வெலிமடை, ஹப்புத்தளை ஆகிய பகுதிகளிலிருந்து அதிகளவான விவசாயிகள், பண்டாரவளை ஞாயிறு சந்தைக்கு மரக்கறிகளைக் கொண்டுவந்து விற்பனை செய்வதாகவும் அத்துடன், நுகர்வோர் உட்பட பெரும்ளவானோர் இந்தச் சந்தையால் பயனடைகின்றனர் என்றும் தெரிவித்த அவர், அவர்களது சுகாதார பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே மறுஅறிவித்தல் வரை ஞாயிறு சந்தையை இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
8 minute ago
19 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
2 hours ago