Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு 13, ஆத்துருப்பூவீதி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ கதிரேஷன் வீதியில் வைத்து 10 கிலோகிராம் 500 கிராம் கஞ்சா வைத்திருந்த நபரொருவரை, புதன்கிழமை (26) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபரை கைது செய்ததாகவும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 15 இலட்சம் ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் இவரை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago