Editorial / 2020 ஜனவரி 20 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்
வடக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்கள், அரச நியமனம் வழங்கக் கோரி, வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
மாகாணத்தில் நீண்டகாலமாகக் கடமையாற்றி வருகின்ற நிலையிலும், இதுவரை நியமனம் வழங்கப்படாததைக் கண்டித்தும் நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தியுமே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நியமனத்தை வழங்கக்கோரி, பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடிய போதிலும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இதன்போது தெரிவிக்கப்பட்டது.
ஆகவே, தற்போது புதிதாகத் தெரிவாகியுள்ள ஆளுநர், இதற்கு உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்கவேண்டும் என்று இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஆளுநரின் ஊடகச் செயலாளர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி, நாளை மறுதினம் (22), ஆளுநருடனான சந்திப:பு ஏற்பாடு செய்துகொடுக்கப்படும் என, உறுதிவழங்கியதையடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
3 hours ago
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
7 hours ago