Niroshini / 2016 மார்ச் 26 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பருத்தித்துறை, வியாபாரி மூலைப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதில் படுகாயங்களுக்குள்ளான மூவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
ராஜ் (வயது47), ராஜ் சரோஜினிதேவி (வயது 42), மற்றும் ராஜ் ரஞ்ஜித் (வயது 17) ஆகியோர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நபர்களின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த அதே பகுதியைச் சேர்ந்த இருவர், வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்தே, குறித்த மூவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய 37, 43 வயதுடைய இருவரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
14 minute ago
31 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago
59 minute ago
1 hours ago