Suganthini Ratnam / 2011 ஜனவரி 16 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பூநகரி - சங்குப்பிட்டி பாலம் மக்களின் பாவனைக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
288 மீற்றர் நீளமுடைய இப்பாலத்தை நிர்மாணிப்பதற்காக 800 மில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கம் செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருவழிப் பாதைகளைக் கொண்ட இப்பாலம் நிர்மாணிக்கப்பட்டதன் மூலம் சுமார் 110 கிலோமீற்றர் தூரமானதென்பதுடன்,; 3 மணித்தியால பயண நேரம் தூரம் குறைவடைவதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .