2025 ஜூலை 12, சனிக்கிழமை

குற்றச்செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 03 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடபகுதியில்  இடம்பெறுகின்ற குற்றச்செயல்கள் தொடர்பாக பொலிஸாருக்கு உடனடியாகப் பொதுமக்கள் அறிவிப்பதற்கு வசதியாகத் தொலைபேசி வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

வடக்கில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்கள் தொடர்பாகப் புலனாய்வுப் பொலிஸாருக்கு யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள அவர்களது செயற்பாட்டு அலுவலகத்திற்கு அறிவிக்கமுடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். அலுவலகத்திற்கு 021 ௨228355 என்ற தொலைபேசி எண்ணுக்கும் காங்கேசன்துறை அலுவலகத்திற்கு 011 ௩188824 என்ற தொலைபேசி எண்ணுக்கும் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு 011 ௨422176 என்ற எண்ணுக்கும்  தொடர்புகொண்டு குற்றச்செயல்கள் தொடர்பாக பொதுமக்கள் முறையிடலாமென யாழ். பொலிஸ் ஊடகத் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .