2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மின் தாக்குதலுக்கு இலக்கான பொதுச்சுகாதார பரிசோதகர் பலி

Menaka Mookandi   / 2011 ஜூன் 13 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கொக்குவில் பகுதியில் மின் தாக்குதலுக்கு இலக்காகி பொதுச்சுகாதாரப் பரிசோதகர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த வைரமுத்து தயாமோகன் (வயது 39) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

தொலைக்காட்சியைப் பார்த்து விட்டு அதற்கான மின் இணைப்பைத் துண்டிக்கும் போதே அவர் மின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளர் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X