Super User / 2010 நவம்பர் 13 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
வடமராட்சியில் இரு இடங்களில் இன்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்ககள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளின்போது 260 இற்கும் மேற்பட்டோர் சாட்சியமளித்தனர். இவர்களில் சிலர் எழுத்துமூலமும் சாட்சியங்களை சமர்ப்பித்தனர்.
பலர் தமது கணவர், சகோதரர், பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கண்ணீர்மல்க அழுதழுது சாட்சியமளித்தனர். சிலர் இரகசியமாக சாட்சியமளித்தனர்.
இன்று காலை குடத்தனை தென்னிந்திய திருச்சபை மண்டபத்தில் நடைபெற்ற விசாரணைகளின்போது 106 பேர் சாட்சியமளித்தனர்.
பிற்பகல் 2 மணியளவில் நெல்லியடி முருகமூர்த்தி திருமண மண்டபத்தில் நடைபெற்ற விசாரணைகளின்போது 160 பேர் சாட்சியமளித்தனர்.
2 hours ago
4 hours ago
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
16 May 2026
16 May 2026