Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 13 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்
யாழ். ஊடக அமையத்தின் ஸ்தாபகரும் ஒருங்கிணைப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரட்ணம் தயாபரனின் வீட்டில் 40 பவுண் நகை இன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை, உடுப்பிட்டியில் அமைந்துள்ள தயாபரனின் வீட்டிலேயே, மேற்குறித்த கொள்ளை இடம்பெற்றுள்ளது. தயாபரனும் அவரது மனைவியும் அரச உத்தியோகத்தர்கள் என்ற நிலையில், அவர்கள் பணிக்கு சென்ற சமயம், அவரின் பிள்ளைகளும் பாடசாலை சென்றிருந்தபோது, வீட்டில் யாருமில்லாத சமயமே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது.
வீட்டின் யன்னல் கம்பியை உடைத்து, அதன் வழியே உட்சென்றே நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. தவிர, கொள்ளையர்கள் மதில் பாய்ந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
இக்கொள்ளை தொடர்பில், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட நிலையில், வல்வெட்டித்துறைப் பொலிஸார் வீட்டுக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago