Shanmugan Murugavel / 2026 மார்ச் 04 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச் செய்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இடைக்கால நிர்வாகத்தை சர்வதேச கிரிக்கெட் சபை அனுமதிக்காத்தென்ற நிலையில அவர்களுடன் கதைத்து தேவையான மாற்றங்களைச் செய்ய இரண்டாண்டுகளைப் பெற்றதாகவும் ஆனால் தயாசிறி ஜயசேகர விளையாட்டமைச்சராக வந்து அனைத்தையும் மாற்றியதாகவும் நவீன் சமூகவலைத்தளத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அந்நேரத்தில் அரசியல் சூழல் காரணமாக நிஷாந்தவுக்கு ஆதரவளிக்கவில்லை நவீன் மேலும் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையில் மூன்று தடவைகள் வெற்றிகரமாக செயலாளராக நிஷாந்த காணப்பட்ட நிலையில் ஐந்து தடவைகள் உலக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .