2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கற்றாளை உற்பத்தியாளர் சங்கம் ஆரம்பம்

எம். றொசாந்த்   / 2019 ஜூன் 10 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.மாவட்ட கற்றாளை உற்பத்தியாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி விவசாய மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, நிர்வாக தெரிவுகள் இடம்பெற்றன.

புகையிலைக்கு மாற்று பயிர்செய்கை வேண்டும் என விவசாயிகள் சிந்திக்கும் கால கட்டத்தில் கற்றாளை செய்கைக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளன.

அதனால் அவற்றின் உற்பத்தியினை ஊக்குவித்தல், அதற்கான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தல், சட்டவிரோதமான முறையில் பிடுங்கப்படும் கற்றாளைகளை பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளை குறித்த சங்கம் எதிர்வரும் காலத்தில் முன்னெடுத்து செல்லும் என தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .