Editorial / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
தொல்புரம் வழக்கம்பரை அம்பாள் அறக்கட்டளை நிதியம், தேங்காய் சிரட்டை மூலம் கைவினை, அழகுசாதனப் பொருள்களை உருவாக்கும் கற்கை நெறியின் புதிய பிரிவுக்கான வகுப்புகளை, செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது.
இலவசமாக வழங்கப்படவுள்ள இக்கற்கை நெறியில், ஆர்வமுள்ள அனைவரும் பங்கு பெறலாம் எனவும் இதன் மூலம் சுயதொழில் வாய்ப்புகளை இளைஞர், யுவதிகள் பெற்றுக்கொள்ள வாய்ப்புண்டு எனவும், அறக்கட்டளை நிதியத்தினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, இங்கு கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர்களின் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான வசதிகளையும், அறக்கட்டளை நிதியத்தினர் வழங்கவுள்ளனர்.
மேலதிக தகவல்களை, 0770829763 எனும் இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர்.
9 hours ago
24 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
24 Apr 2026