Gavitha / 2016 மே 31 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை நுகர்வோர் மத்தியில் திறன்பேசி பாவனை அதிகரித்து வருவதோடு அண்ட்ரொய்ட் அடிப்படையிலான திறன்பேசிகளுக்கான கேள்வி பரவலானதாக விளங்குகிறது.
Cellcity Pvt Ltd. நிறுவனம், அண்மையில் MEIZU திறன்பேசிகளை அறிமுகம் செய்து வைத்தது.
2003ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட திறன்பேசிகள் வர்த்தக நாமமான MEIZU உயர்ந்த வடிவமைப்பு மற்றும் mTouch தொழில்நுட்பத்துடனான கைரேகை அடையாள அங்கிகாரம் போன்ற சிறப்பம்சங்களுடன், சர்வதேச தரத்திலான, பிரீமியம் மற்றும் நடுத்தர விலைகளிலான திறன்பேசிகளின் தயாரிப்புக்கு புகழ்பெற்றதாகும். 2,500க்கும் அதிகமான சேவை மையங்கள் மற்றும் 500,000 க்கும் அதிகமான விற்பனை முகவர்களுடன் MEIZU Technologies நிறுவனமானது, உலகளவில் செயற்பட்டு வருகிறது.
அண்ட்ரொய்ட் 5.0 அடிப்படையிலான பிரத்தியேக Flyme OS உடனான MEIZU திறன்பேசிகள், சிறந்த பயனர் இடைமுகம், பற்றரி மேம்படுத்தல்களுடன் பல்வகை பயன்பாட்டின் போது மேம்பட்ட பயனர் அனுபவத்தை தருகின்றன.
Cellcity Pvt Ltd. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கேஷான் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், 'நாடளாவிய ரீதியில் 17 சேவை மையங்கள் மூலம் முதற்தர மொபைல் விற்பனையின் பின்னரான சேவைகளை வழங்குவதற்கு எமது அர்ப்பணிப்பான ஊழியர்கள் எப்போதும் தயாராக உள்ளார்கள். 2 வருட உத்தரவாதத்துடன் கிடைக்கப்பெறும் MEIZU திறன்பேசிகள் நுகர்வோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுவது நிச்சயம்' என்றார்
42 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
19 Mar 2026