Editorial / 2020 மார்ச் 10 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் Esports தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றி Gamer.LK உடன் கூட்டு சேர்ந்து மொபிடெல், இலங்கையின் மிகப் பெரிய மொபைல் லீக் போட்டியான Mobitel PUBG Mobile Esports Premier League 2020 ஐ நிறைவுசெய்தது.
Mobitel Esports Premier League இன் தொடக்கமானது, இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் ஒவ்வொரு அணியைக் கொண்டிருந்ததால், நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பங்குபற்றுவோருக்கு சந்தர்ப்பத்தையும் உற்சாகத்தையும் இது வழங்கியது. தீவிரமான தகுதி காண் போட்டிகளுக்கு பிறகு ஈஸ்டர்ன் கிளாடியேட்டர்ஸ், கந்துரட்ட கிங்ஸ், நொதர்ன் ரேன்ஜர்ஸ், ரஜரட ஜயன்ட்ஸ், சப்ரகமுவ நைட்ஸ், சதர்ன் ஷார்க்ஸ், ஊவா பன்டிட்ஸ், வயம்ப ரேய்டர்ஸ் மற்றும் வெஸ்டர்ன் வொரியர்ஸ் ஆகியோருக்கு கிராண்ட் பரிசாக ரூ. 1 மில்லியன் வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடிய தொகையாக அறிவிக்கப்பட்டது.
Mobitel Esports Premier League இன் ஒட்டுமொத்த போட்டிகளின் சம்பியனாக நொதர்ன் ரேன்ஜர்ஸ் தெரிவு செய்யப்பட்டனர். வயம்ப ரேய்டர்ஸ் மற்றும் சதர்ன் ஷார்க்ஸ் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்தன. பங்கேற்பாளர்களை பொறுத்தவரை 300க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றிய நிலையில் இந்த போட்டிகள் ஒரு தலைப்பு நிகழ்வாக சாதனை படைத்தது. மொபிடெலின் மேம்பட்ட 4G இணைப்பால் இயக்கப்படுகிற Facebook, YouTube, Twitch, Mixer மூலம் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் விறுவிறுப்பான இந்நிகழ்வினை நேரடியாக கண்டு அனுபவித்தனர்.
32 minute ago
6 hours ago
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
6 hours ago
28 Dec 2025
28 Dec 2025