Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 05 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில், கடலுணவுகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.
அதாவது, 1 கிலோ கிராம் 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகள், தற்போது 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
அதேபோல, 300 ரூபாய்க்குக் குறைவாக விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகள் தற்போது 1 கிலோ கிராம் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
கடலுணவுகளின் விலை அதிகரிப்பால், அதிகளவான குடும்பங்கள் தொழில் வாய்ப்புகள் இல்லாத நிலையிலும் வருமானமற்ற நிலையிலும் வாழ்ந்துவருகின்றன.
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பிடிக்கப்படும் கடல் மீன்களும் இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களில் பிடிக்கப்படுகின்ற நன்னீர் மீன்களும் தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்படுவதன் காரணமாகவே. கடலுணவுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
2 hours ago
4 hours ago