Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 25 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் தாழ்வுபாடு பகுதியில், மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று இன்று (25) இடம்பெற்றுள்ளது.
மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பெப்சிகர் பீரிஸ் (23) என்ற இளைஞன் சக மீனவருடன் இன்று காலை தாழ்வுபாடு கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
குறித்த படகினை ஓட்டிச் சென்ற இளைஞன் படகில் இருந்து திடீரென கடலில் வீழ்ந்துள்ளார். உடனடியாக சக மீனவர் காப்பாற்ற முயற்சி செய்ததோடு, ஏனைய மீனவர்களுக்கும் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, மீனவர்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இளைஞனின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
30 minute ago
55 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
55 minute ago
56 minute ago