2025 ஒக்டோபர் 30, வியாழக்கிழமை

100 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில், 100 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் சனிக்கிழமை (26) நடைபெற்றது.

இலங்கை பாதுகாப்பு தலைமையகத்தின் கிளிநொச்சிக் கட்டளைப் பணியகத்தின் ஏற்பாட்டில் இராணுவ ஒத்துழைப்பு மையத்தின் ஊடாக நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கிளிநொச்சி படைகளின் கட்டளைத்தளபதி மேஐர்  சுதந்த ரணசிங்க, வைத்திய அதிகாரிகள் எம்.ஜெயராஜா, முரளிதரன், நிசாந்த றணசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X