2025 ஜூலை 02, புதன்கிழமை

மீன்பிடி வலையில் சிக்கிய கடற்பன்றிகள் ; மீனவர் கைது

Kogilavani   / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியின் வங்காலைப்பாடு கடற்பகுதியில்  மீனவர் ஒருவரின் வலைத்தொகுதியில் சிக்கி உயிழந்த நிலையில் கரைக்குகொண்டு வரப்பட்ட இரண்டு கடற்பன்றிகளை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளதுடன் மீனவரையும் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி மீனவர் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக சென்றபோது அவரது வலைத்தொகுதியில் இறந்த நிலையில் பன்றிகள் சிக்கியுள்ளன.

குறித்த மீனவர் பொலிஸாருக்கு தகவலை வழங்காமல் கடற்பன்றிகளை கரைக்குக்கொண்டு வந்துள்ளார். இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து காட்டுப்பன்றிகளை மீட்டதுடன் மீனவரையும் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவரை விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .