2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் இல்லங்கள் நன்னடத்தை திணைக்கள விதிமுறைகளுக்கு அமைவாக இருக்க வேண்டும்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் உள்ள சிறுவர் இல்லங்கள் சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள விதிமுறைகளுக்கு அமைவாக இருந்தால் மட்டுமே சிறுவர் இல்லங்களாக பதிவு செய்யமுடியும் என வடமாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறுவர்களுக்கு முக்கியமான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டு;ம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லங்களில் உள்ள வசதிக்கு அமையவே சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அத்துடன் சுகாதார வசதிகள், சிறுவர்களுக்குரிய கல்வி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் அடங்கியிருக்க வேண்டு;ம் எனவும் நன்னடத்தை திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .