2024 மே 03, வெள்ளிக்கிழமை

‘மக்களின் காணிகளில் வேலியிட்டுள்ள படையினர்’

Editorial   / 2020 ஜூன் 01 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன், நடராசா கிருஸ்ணகுமார்

 

வவுனியா - செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பொதுமக்களின் பல ஏக்கர் காணிகளைப் பிடித்து, விவசாய நடவடிக்கை மேற்கொள்வதற்காக, படையினர் வேலியிட்டுள்ளார்களென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய காலாநிதி சிவமோகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இதற்கு நடவடிக்கை எடுக்காத வனவளப்பிரிவு, தமிழ் மக்கள் தங்களுக்கு உரித்தான காணிகளை அபிவிருத்தி செய்ய முற்படும் போது, அவர்களுக்கு இடையூறு செய்து, நீதிமன்றங்கள் மூலம் வழக்குத் தொடுத்து வருவது எதற்காக எனவும் வினவினார்.

அப்படி எனில், இலங்கையின் நீதி படையினருக்கு ஒன்றாகவும் தமிழ் மக்களுக்கு ஒன்றாகவும் உள்ளதா என்பதை உரியவர்கள் தெளிவுபடுத்த வேண்டுமெனவும், அவர் கூறினார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .