2024 மார்ச் 28, வியாழக்கிழமை

காணித்தகராறில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி பலி

A.P.Mathan   / 2012 நவம்பர் 10 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை கெகனதுர, பண்டாரநாயக்கபுர பகுதியில் காணித் தகராறொன்றின்போது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியொருவர் மரணமாகியுள்ளதுடன் படுகாயமடைந்த ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இரு குடும்பங்களில் காணி எல்லைப் பிரச்சினையின்போது வாள், இரும்புக் கம்பிகளினால் அடிதடியில் இறங்கினர். இச்சம்பவத்தின்போது தகராறில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரே தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X